பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தள்ளிவைப்பு: அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
சென்னை: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொறியியல் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நீட் தேர்வு முடிவு வெளியான பிறகே பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என அவர் தெரிவித்தார். முன்னதாக ஜூன் 27ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.