ரூபி மனோகரன் பிறந்த நாளில் ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணி துவக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூபி மனோகரன் பிறந்த நாளில் ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணி துவக்கம்

சென்னை: சென்னை தாம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ரூபி பில்டர்ஸ் நிறுவனருமான ரூபி ஆர். மனோகரன் நேற்று தனது பிறந்த நாளை கேக் வெட்டி குடும்பத்தினருடன் வெகுசிறப்பாக கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

அத்துடன் தனது பிறந்த நாளில் தாம்பரம் பகுதி முழுவதும் சுமார் 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு ரூபி ஆர். மனோகரன் திட்டமிட்டிருந்தார். இதன்படி மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.



இந்த மரக்கன்றுகள் அனைத்தையும் ஓராண்டு முழுவதும் பராமரித்து வளர்க்கவும் ரூபி மனோகரன் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.

முன்னதாக, தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ். திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

.

மூலக்கதை