பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது: சிசிடிவி கேமராவில் சிக்கினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது: சிசிடிவி கேமராவில் சிக்கினர்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம், சன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி ருக்மணி (53).

இவர் கடந்த 17ம் தேதி மாலை 4 மணியளவில் பால் வாங்க வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், ருக்மணி அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

புகாரின்பேரில் பூந்தமல்லி குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ருக்மணியிடம் செயின் பறித்தது கீழ் அயனம்பாக்கம், மகாத்மா காந்தி தெருவை சேர்ந்த பரத் (32), மேல்அயனம்பாக்கம், பாடசாலை தெருவை சேர்ந்த மங்கள் (எ) மங்களநாதன் (25) ஆகியோர் என்பதும் இவர்கள் ஏற்கெனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.



இதையடுத்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று இருவரையும் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து 5 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

.

மூலக்கதை