விடுதியில் விஷம் குடித்து மாற்றுத்திறனாளி பெண் சாவு
திருவள்ளூர்: திருவள்ளூர் பஸ் நிலையம் பின்புறம் தனியார் லாட்ஜ் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, தேனாம்பிகை (35) என்ற மாற்றுத்திறனாளி பெண், சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் தெருவில் இருந்து வருகிறேன் என்று கூறி அறை எடுத்து தங்கியுள்ளார்.
பின்னர் விடுதியில் இருந்து கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு, அறைக்கு வந்தார் தேனாம்பிகை. அதற்கு பிறகு வெளியே வரவில்லை.
நேற்றிரவு 7 மணி வரை அறைக்கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த லாட்ஜ் பணியாளர்கள், மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். லாட்ஜ் கதவை உடைத்து உள்ளேசென்று பார்த்தபோது, தேனாம்பிகை வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து, சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேனாம்பிகை விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.