தடுப்பணை கட்ட தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும் : ஹெச்.ராஜா
நாகபட்டினம்: சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா சீர்காழி அருகே கொள்ளிடத்தில் தட்டுப்பணை கோரும் பகுதியில் அணை கட்ட தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார். அணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை என்று ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.