கூடங்குளம் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை மோதி – புதின் துவக்கி வைத்தனர்
கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இன்று சனிக்கிழமை, காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்தனர்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் உச்சி மாநாடு கோவா நகரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் கலந்துகொண்டுள்ளார்.
இந்தியா – ரஷ்யா இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இன்று காலையில் துவங்கின.
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் மோதியும், ரஷ்ய அதிபர் புதினும் காணொளிக் காட்சி மூலம் கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்தனர்.
இதற்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோதி, இந்திய நலன்களுக்கு முரணாக ரஷ்யா எதனையும் செய்யாது என்று குறிப்பிட்டார்.
ரஷ்ய ஒத்துழைப்புடன் மேலும் 8 அணு உலைகள் கட்டப்படும் நிலையில், அணுசக்தி விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இருதரப்புக்குமே பலனளிக்கும் என மோதி தெரிவித்தார்.
நிலையான நட்புறவு
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் இந்திய நிறுவனங்கள் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருப்பதையும் மோதி சுட்டிக்காட்டினார்.
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவுடனான உறவில் நிலையான அணுகுமுறையைப் பின்பற்றி வருவதாக சுட்டிக்காட்டினார்.
இந்தியா – ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து இரு நாடுகளுக்கு இடையேயும் ஆந்திரப் பிரதேச ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஹரியானா ஸ்மார்ட் சி்ட்டி திட்டம், ஆந்திராவில் கப்பல் கட்டும் திட்டம், ராஸ்நெஃப்ட் – எஸ்ஸார் எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம், நாக்பூர் – செகந்திராபாத் – ஹைதராபாத் அதிவேக ரயில் திட்டம், இணையப் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட 16 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள S-400 த்ரயம்ஃப் பாதுகாப்பு அமைப்பை வாங்க விருப்பதாக இந்தியா அறிவித்திருக்கிறது. மேலும் கமோவ் ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் தொழிற்சாலையை இருதரப்பும் சேர்ந்து அமைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
