இணையத்தில் வெளியான படத்தால் நடிகை அதிர்ச்சி

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
இணையத்தில் வெளியான படத்தால் நடிகை அதிர்ச்சி

பிரபல கன்னட நடிகை சோனு கௌடா, தமிழில் ஆண்மை தவறேல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அமரா, 144, நாரதன் திரைப்படங்களில் நடித்தார். தற்போது கவலை வேண்டாம் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதுதவிர நாய்குட்டி படம், ஆளுக்கு பாதி, எங்க காட்டுல மழை படங்களில் நடித்து வருகிறார்.

சோனு கௌடா ஒரு ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதோடு சோனு கௌடா பற்றிய தவறான தகவலும் அந்த படத்துடன் வெளிவந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோனு கௌடா, “படத்தில் இருப்பது என் கணவர். எங்களது அந்தரங்க படத்தை யாரோ விஷமிகள் வெளிட்டு என்னை பற்றி அவதூறு பரப்புகிறார்கள். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். படத்தை பதிவேற்றம் செய்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பெங்களூரு தலைமை சைபர் கிரைம்பொலிஸாரிடம் புகார் செய்துள்ளார். படம் பரவாமல் தடுத்த பொலிஸார், தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூலக்கதை