கண்ணீருடன் சீமான் கூறிய அறிவுரை இது தான்?

CINEULAGAM  CINEULAGAM
கண்ணீருடன் சீமான் கூறிய அறிவுரை இது தான்?

சீமான் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர். இவர் ஒரு அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். இந்த கட்சி சார்பாக நேற்று காவேரி பிரச்சனைக்காக கர்நாடகா அரசை எதிர்த்து பேரணி நடத்தினர்.

அப்போது எதிர்ப்பாராத விதமாக ஒரு இளைஞர் தீக்குளித்தார், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார், இதை தொடர்ந்து சீமான் கூறுகையில் ’யாரும் உயிரைத் தரவேண்டாம், உணர்வைத் தந்தால் போதும்.

பல இலட்சம் உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம் மேலும் எந்த உயிரும் பலியாகக் கூடாது, நாம் கொடுத்த உயிர்கள் போதும். உங்கள் ஒவ்வொருவர் மீதும் சின்னக் கீறல் பட்டாலும் அது என்னை பாதிக்கும் எனக்கு வேதனையைத் தான் தரும்’ என கண்ணீருடன் கூறியுள்ளார்.

மூலக்கதை