பொதுமக்களின் நிலத்தை கடற்படையினருக்கு கொடுக்க முள்ளிவாய்க்கால் மக்கள் எதிர்ப்பு
முள்ளிவாய்க்கால் பகுதியில் வட்டுவாகல் என்னுமிடத்தில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கு அந்தக் காணிகளை கையகப்படுத்துவதற்காக நில அளவை செய்யச் சென்ற அதிகாரிகள் அப்பிரதேச மககளினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் கிழக்கில் வட்டுவாகல் என்னுமிடத்தில் 617 ஏக்கர் காணியை 3 ஆம் தேதி புதன்கிழமை முதல் 5 ஆம் தேதி வரையில் கடற்படையினருக்காக நில அளவை செய்யவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அளவையாளர் பா.நவஜீவன் அறிவித்திருந்தார்.
இந்தக் காணிகளுக்கு உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை செய்யும்போது அங்கு வருகை தந்து தமது காணிகளை அடையாளம் காட்டுமாறும் அவர் கோரியிருந்தார்.
இதனையடுத்து, தமது காணிகளை கடற்படையினரின் தேவைக்கு அளவீடு செய்ய அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்து, காணி அளவீடு செய்யவிருந்த இடத்தில் கூடிய மக்கள் சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தக் காணிக்குரிய தமது ஆவணங்களையும் அவர்கள் அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளிடம் காட்டியதையடுத்து நில அளவை அதிகாரிகள் நில அளைவப் பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர்.
அத்துடன் தமது காணிகள் தங்களிடம் திருப்பி கையளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் முல்லைத்தீவு அரச அதிபருக்குக் கையளிப்பதற்காக அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது,
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இந்த மகஜரின் பிரதிகள் வழங்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்த்pல் ஈடுபட்டிருந்த கிராம முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
