இலங்கை: நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் புதையுண்ட வீடு
இலங்கை, நுவரெலியா மாவட்டம், கினிகத்தேனை பிரதேசத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நில அதிர்வின் போது, நிலம் தாழ இறங்கியதன் காரணமாக மக்கள் குடியிருப்பொன்று மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.
கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில் நிகழ்ந்த நில அதிர்வில், 50 - 60 அடி வரையில் நிலம் இறங்கியுள்ளதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் நான்கு வீடுகளிலும், நிலத்திலும் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இங்கு வசித்து வந்த குடியிருப்பாளர்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதால், பொது மக்களுக்கு சேதங்கள் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த பிரதேசத்தில், புதிதாக தனியார் மற்றுமோர் மின் உற்பத்தி மையமொன்றை ஆரம்பிப்பதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்கான சுரங்க பாதைகள் அமைப்பதற்கான மலைகள் வெடி வைத்து தகர்க்கப்படும் போது, இந்த நில அதிர்வு நடைபெறுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
