அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு வழங்கியது.
டெல்லி விமான நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை விசாரணை நடத்தி சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கியது.
டெல்லி மேல்–சபையில் சசிகலா புஷ்பா பேசுகையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும்படி என்னை வற்புறுத்துகிறார்கள். நான் பதவி விலகப்போவது இல்லை. தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார். அவரது பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேல்–சபையில் பேசியதை அடுத்து டெல்லியில் உள்ள அவருடைய வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்று டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணை செய்த டெல்லி ஐகோர்ட்டு சசிகலா புஷ்பா பாராளுமன்றம் சென்று வருவதற்கு வாகனத்துடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், வீடு தவிர பாராளுமன்றம் சென்று வருவதற்கு மட்டும் வாகனத்துடன் கூடிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மத்திய உள்துறை, டெல்லி காவல்துறை ஆணையர் மற்றும் டெல்லி மாநில அரசு இதுதொடர்பாக பதிலளிக்க கேட்டுக் கொண்ட ஐகோர்ட்டு, வழக்கின் மீதான விசாரணையை வருகிற நவம்பர் 15–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
டெல்லி போலீஸ் பாதுகாப்பு
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு வழங்கியது.
புதுடெல்லி மாவட்ட மூத்த போலீஸ் அதிகாரி பேசுகையில், “சசிகலா புஷ்பா எம்.பி.க்கு பாதுகாப்பு அளிக்க 4 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். சசிகலா புஷ்பாவின் வடக்கு அவின்யூ வீட்டுப்பகுதியில் பிசிஆர் வேன் (டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறை) நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. சசிகலா புஷ்பா அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிஉள்ளார், அவருக்கான அச்சுறுத்தலும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது,” என்று கூறிஉள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
