தமிழர்களால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது…அது தோல்வியே இல்லை: ராஜபக்சே
தமிழர்களின் வாக்குகளால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த அவர் முடிவுகள் முழுமையாக வெளிவருதற்குள் அதிபரின் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார்.
தலைநகரில் இருந்து அம்பா தோட்டா மாவட்டம் மெகமுல்லனாவில் உள்ள சொந்த வீட்டுக்கு சென்ற ராஜபக்சே அங்கு திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
வடக்கு, கிழக்கு, மற்றும் மலையக பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் எதிராக வாக்களித்ததே தமது தோல்விக்கு காரணம் என்று கூறினார்.
இருப்பினும் தமிழர்களின் வாக்குகளால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது என்று கூறிய அவர் அதனை ஒரு தோல்வியாக நான் கருதவில்லை.
சிங்களர்களை விட்டு அதிகாரம் இன்னும் செல்லவில்லை என்றும் தனது தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
