இலங்கை அதிபர் தேர்தல்: மாளிகைக்கு வருகிறார் மைத்திரி…வெளியேறினார் ராஜபக்சே
இலங்கையின் புதிய அதிபராக இன்று மாலை மைத்திரிபால சிறிசேனா பதவியேற்கவிருக்கிறார்.
நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித்து மைத்திரிபால முன்னிலை ஆதிக்கம் பெற்றுள்ளார்.
இன்று மாலை இலங்கை அதிபராக சிறிசேனா பதவி ஏற்பதாக உள்ளதால் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மைத்ரி பால சிறிசேனா நன்றி
வாக்களித்த மக்களுக்கு மைத்ரி பால சிறிசேனா நன்றி தெரிவித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், நாட்டை நல்வழியில் நடத்தப் போவதாக சிரிசேனா இலங்கை மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
சிறிசேனாவுக்கு அதிக வாக்குகள்
தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிசேனாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. சிங்களர்கள் வசிக்கும் பகுதியிலும் சிறிசேனாவுக்கு அதிக ஆதரவும் பெற்றுள்ளார்.
மைத்ரி பால சிரிசேனா 75.67 சதவீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். மகிந்த ராஜபக்சே 22 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அமைதியான எதிர்காலம் அமைய இலங்கை மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்ள் தெரிவித்துள்ளார்.
தோல்வியை ஒப்புகொண்டார் ராஜபக்சே
இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட ராஜபக்சே அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பின் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
