பேஸ்புக் நண்பரா சுவாதியைக் கொன்றார்?- இறுகும் விசாரணை
சுவாதியுடன் ஃபேஸ்புக்கில் சாட்டிங் செய்த இரண்டு பேரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும், கொலையாளியை நெருங்கி விட்டோம் என்றும் காவல்துறையினர் தொிவித்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் வைத்து மர்மநபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ரயில்வே போலீசாருடன் இணைந்து சென்னை மாநகர போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கொலையாளியை கண்டு பிடிக்கவில்லை. இந்த நிலையில் வழக்கு விசாரணை மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சுவாதியைக் கொன்ற கொலையாளி யார்? என்பது பற்றி 5 நாட்களாகியும் எந்தவிதமான துப்பும் துலங்காமலேயே உள்ளது. கேமரா காட்சிகளும், கொலையாளி வீசிவிட்டுச் சென்ற அரிவாளில் பதிவாகி இருந்த கைரேகைகளும், போலீஸுக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. சுவாதியின் செல்போன் எண்ணை வைத்தும் துப்பு துலக்கப்பட்டது. அவர் யார் யாருடன் பேசி இருக்கிறார் என்பது பற்றிய விவரங்களை போலீஸார் சேகரித்தனர். இதன் மூலமாக 100-க்கும் மேற்பட்ட செல்போன் எண்களைக் கண்டுபிடித்த போலீஸார் சுவாதியிடம் போனில் பேசிய அனைவரிடமும் விசாரித்தனர். ஆனால் எந்தவிதத் துப்பும் துலங்கவில்லை.
சுவாதியின் செல்போனில் முக்கியமான ஆதாரங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீஸார், கொலையாளி எடுத்துச் சென்ற செல்போன் இதுவரை கிடைக்காததால் சுவாதியின் ஃபேஸ்புக் கணக்கை ஆய்வு செய்தனர். அப்போது அவருடன் நண்பர்கள் 2 பேர் தொடர்ந்து சாட் செய்து பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் கேமராவில் பதிவாகி இருக்கும் வாலிபர் போன்ற தோற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்தான் சுவாதியைக் கொன்ற கொலையாளியாக இருக்கலாமோ என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், சுவாதி கொலையில் விரைவில் துப்பு துலங்கும் என்றும் கொலையாளியை நெருங்கிவிட்டோம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
