மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்க ‘ரிலையன்ஸ்’ ரவுடிகளை ஏவிவிடுவதா?
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த பத்மபிரியா தமது மகனின் எம்.பி.ஏ. படிப்புக்காக பாரத ஸ்டேட் வங்கியில் பெற்ற கடனை உடனே செலுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் அதிகாரிகள் மிரட்டியதால் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
நாடு முழுவதும் உயர் கல்வி படிப்புக்காக வங்கிகள் மாணவர்களுக்கு கல்வி கடனுதவி அளித்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி படிப்புகளை படித்து முடித்துள்ளனர்.
ஆனால் படித்த முடித்த உடனேயே வேலை கிடைக்காததால் வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை அடைக்க முடியாத இக்கட்டான துயர நிலையில் அவர்களின் பெற்றோர்கள் தத்தளித்து வருகின்றனர். இத்தகைய கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத மாணவர்களின் கல்விக் கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி, கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களிடம் இருந்து தொகையை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது. இந்த ரிலையன்ஸ் நிறுவனம் ஏவிவிடும் குண்டர்கள், அப்பாவி மாணவர்களையும் பெற்றோர்களையும் மிரட்டி உடனே பணத்தைச் செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதன்விளைவுதான் இந்த மிரட்டல்களால்தான் கோவை பத்மபிரியா தாம் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார். படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் குடும்ப சுமையை தோளில் தாங்கியபடி வேலை தேடி அலையும் இளைஞர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இவர்களை மேலும் கடுமையாக மன உளைச்சலுக்குள்ளாக்கும் வகையில் ரிலையன்ஸ் குண்டர்களை பாரத ஸ்டேட் வங்கி ஏவிவிடுவது வன்மையாக கண்டனத்துக்குரியது.
இத்தகைய போக்கை பாரத ஸ்டேட் வங்கி உடனே கைவிட வேண்டும். இப்படியான குண்டர்படையை ஏவிவிட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் குண்டர்களை ஏவுதலை கைவிடாவிட்டால் மாணவர்களை ஒன்றுதிரட்டி தமிழகம் முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கிறேன்.
பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
