ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையத்தில் உறுப்பினரானது இந்தியா!
ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையத்தில் இந்தியா இன்று (திங்கட்கிழமை) உறுப்பினர் ஆகியுள்ளது. இதன்மூலம், இரசாயன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள், அணுசக்தி உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் சர்வதேச அமைப்பான ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் (எம்.டி.சி.ஆர்) இந்தியா இணைந்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் உள்ளிட்ட நாடுகளின் முன்னிலையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
34 உறுப்பினர்களைக் கொண்ட ஏவுகணை தொழில் கட்டுப்பாட்டு மையத்தில் உறுப்பினராக சேர்வதற்கு இந்தியா கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்தது.
எனினும், அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா உறுப்பினராக சேரும் முயற்சிக்கு சீனா உட்பட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது இந்த அமைப்பில் இந்தியா இணைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
