மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பலி காப்பாற்ற முயன்ற கணவனும் பலி
சென்னையை அடுத்த ஜல்லடியன்பேட்டை பத்மாவதி நகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுபத்திரா (25). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. சுபத்திரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று மாலை சுபத்திரா தனது கணவருடன் சேர்ந்து வீட்டின் மாடியில் நின்று மல்லி செடியில் இருந்து இரும்பு கம்பியை கொண்டு பூக்களை பறித்துக் கொண்டு இருந்தார்.
சுபத்திரா பூ பறிக்க பயன்படுத்திய இரும்பு கம்பி எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் தாக்கி சுபத்திராவின் இடது கை கருகியது.
இதைக்கண்டதும் மனைவியை காப்பாற்ற சவுந்திரராஜன் முயன்றபோது, அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் கணவன்–மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலியானார்கள்.
இவர்களது சத்தம் கேட்டு சவுந்திரராஜன் தந்தை செல்வக்குமார் மகன் மற்றும் மருமகள் ஆகியோரை தொட்டபோது மின்சாரம் தாக்கி அவரும் தூக்கி வீசப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை பொலிஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலியான இருவரது உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த செல்வகுமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுபற்றி பள்ளிக்கரணை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
