சுடுவதற்கு முன்பு கடைசி நிமிடங்களில் அமெரிக்க கொலையாளி செய்தது என்ன? பேஸ்புக் பதிவால் அம்பலம்
ஆர்லான்டோ நகரில் ஓரினச் சேர்க்கையாளர் கிளப்பில் துப்பாக்கி சூடு நடத்தி 49 பேரை கொலை செய்த உமர் மதீன் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். அவர் தாக்குதலுக்கு முன்பாக பேஸ்புக்கில் போட்ட பதிவுகளை வைத்து பார்க்கும்போது, ஓரினச்சேர்க்கையாளர்களை விட அமெரிக்கா மீதே அதிக கோபம் இருந்திருப்பது தெரியவந்துள்ளதாம். ஓரினச்சேர்க்கையாளர்களை கண்டால் உமருக்கு பிடிக்காது என்று அவரது தந்தை சித்திக் பேட்டியளித்திருந்த நிலையில், உமரே ஒரு ஓரினச்சேர்க்கையாளர்தான் என்று அவரது முன்னாள் மனைவி தெரிவித்திருந்தார்.
எனவே, கொலைக்கான காரணம் என்ன என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்ற நிலையில், அந்த அமைப்பால் மூளைச் சலவை செய்யப்பட்டுதான் உமர் மதீன் தாக்குதல் நடத்தியிருக்க கூடும் என்ற சந்தேகம் அமெரிக்க புலன்விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளின் சந்தேகத்தை உறுதி செய்யும்வகையில் மற்றொரு ஆதாரம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. உமர் மதீனின் பேஸ்புக் பதிவுகளை சோதித்து பார்த்தபோது இந்த தகவல் கிடைத்துள்ளது.
துப்பாக்கி சூடு நடத்த சில மணித்துளிகள் முன்புவரை பேஸ்புக்கில் உமர் மதீன் பிசியாக இருந்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளை அமெரிக்கா கொன்று குவித்துவருவதாக அவர் பேஸ்புக்கில் கோபத்தில் கருத்துக்களை கூறியுள்ளார்.
இதுதொடர்பாகவே அவர் கூகுளில் நிறைய சர்ச் செய்தும் வந்துள்ளார். மேற்கத்திய நாடுகள் மீது கடுமையான கருத்துக்களை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இப்படி தன்னையே வெறியேற்றிக்கொண்ட பிறகுதான் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில், பேஸ்புக் நிறுவன தலைமை அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்கின் உதவியை அமெரிக்க பாதுகாப்பு செனட் குழு நாடியுள்ளது. உமரின் பேஸ்புக் நடவடிக்கைகள் குறித்த முழு தகவலை தங்களுக்கு வழங்குமாறு ஸக்கர்பெர்க்கிற்கு செனட் குழு கடிதம் எழுதியுள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
