பாராசூட்டில் பறந்த நபர் : உயர் மின்னழுத்த கம்பியில் மோதி பலி..
பிரான்சில் பாராசூட்டில் பறந்து சாகசம் செய்த நபர் ஒருவர் உயர் மின்னழுத்த கம்பியில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் Chambery பகுதியில் 38 வயதான இந்த பாராசூட் சாகசவீரர் பறந்து சாகசம் செய்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவரது பாராசூட் செயலிழந்துள்ளதாக தெரிகிறது.
இதில் நிலைத்தடுமாறிய அந்த நபர் காற்றின் வேகத்தில் பறந்து சென்றதில், அப்பகுதியில் உள்ள மின்கம்பியில் மோதியுள்ளார். 20,000 வோல்ட்ஸ் உயர் மின்னழுத்த கம்பி என்பதால் அந்த மனிதர் அடுத்த நொடியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.
சுமார் 30 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த நபரை இச்சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் மீட்டுள்ளனர். இதனையடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழு உள்ளிட்ட மீட்பு குழுவினர்,
விபத்துக்குள்ளான நபரை சோதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரிய வந்தது. உயர் மின்னழுத்த கம்பியில் மோதி தூக்கி வீசப்பட்டதாலும், மின்னழுத்தம் தந்த அதிர்ச்சியாலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
