தென்கொரியா விமானத்தில் திடீர் புகை – 300 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள விமான நிலையத்தில் தென்கொரியா நாட்டுக்கு சொந்தமான விமானத்தில் திடீரென புகை எழுந்ததால் அதில் இருந்த 300 பயணிகளும் அவசரவாயில் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் இருந்து தென்கொரியா நாட்டுக்கு சொந்தமான விமானம் சியோல் நகரை நோக்கி புறப்பட தயாரானது. அப்போது, விமானத்தின் இடதுப்புற என்ஜினில் இருந்து திடீரென புகை எழுந்தது.
இதையடுத்து, நான்கு அவசரவாயில்களும் திறக்கப்பட்டன. உள்ளே இருந்த 302 பயணிகளும், விமானி, துணைவிமானி, பணிப்பெண்கள் உள்ளிட்ட 17 பணியாளர்களும் அவசரவாயில் வழியாக வெளியேற்றப்பட்டனர்.
அதற்குள் விரைந்துவந்த தீயணைப்பு வாகனங்கள் நுரையை பீய்ச்சியடித்து புகையை கட்டுப்படுத்தின. இதனால் கடற்கரையோரம் அமைந்துள்ள ஹனேடா விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. விமான ஓடுபாதையை ஒட்டியுள்ள புல்வெளியில் நின்றபடி ஏராளமான மக்கள் விமானத்தின்மீது நுரையை தெளிக்கும் காட்சியை வேடிக்கை பார்த்தனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
