‘தலைவருக்காக வாழ்ந்தேன்… கங்கையில் சமாதி ஆகிறேன்..’ – பாரி வேந்தருக்கு மதன் கடிதம்..!

CINE COFFEE  CINE COFFEE
‘தலைவருக்காக வாழ்ந்தேன்… கங்கையில் சமாதி ஆகிறேன்..’ – பாரி வேந்தருக்கு மதன் கடிதம்..!

» »

  • ‘தலைவருக்காக வாழ்ந்தேன்… கங்கையில் சமாதி ஆகிறேன்..’ – பாரி வேந்தருக்கு மதன் கடிதம்..! Published: May 30, 2016

    நேற்று முதல் திரையுலகை ஒரு கடிதம் கலங்கடித்து வருகிறது. அது எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் பாரி வேந்தருக்கு வேந்தர் மூவிஸ் மதன் எழுதியுள்ளதாக கூறப்படும் கடிதம்தான்.

    அதில்… “கங்கையில் சமாதி ஆகப் போகிறேன்” என தெரிவித்துள்ளார் மதன்.

    உங்கள் பார்வைக்கு அந்த கடிதம்…

    என் நண்பர்களுக்கு, என் உயிர் வேந்தருக்கு, என் குடும்பத்தினருக்கு,ஒரு zeroவில் தொடங்கி, zeroவில் முடிகிறது. என் வாழ்கை கடைசியில் என்ன ஒரு நிம்மதி, காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன். காசி விஸ்வநாதர் இருக்கும் இடத்தில் மரணம் அடைந்தால் அடுத்த ஜென்மம் இல்லை. எனக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம். எந்த ஒரு ஆசையும் இல்லாமல் செல்கிறேன்.

    அப்புறம் என்ன இந்த letter. என்னிடம் Admission பணம் தந்தவர்களும், எனக்காக சினிமாவில் முதலீடு செய்தவர்கள் பயப்பட வேண்டாம். பணம் SRM நிறுவனத்திலும் mgm(ODY) நிறுவனத்திலும் safe ஆகா உள்ளது.

    நீங்கள் அவர்களிடம் பெற்று கொள்ளலாம். யா என் வாழ்வில் எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் வேந்தர். எனக்கு ஒரு பெயரை கொடுத்து என்னை எந்த உலகுக்கு காட்டியவர். SRM நிறுவனம் என்றால் Admission, சினிமாவில், கட்சியில் (IJK) மதன் தான் என்று பெயரை கொடுத்தவர். என் தலைவருக்காக வாழ்ந்தேன். தலைவனால் போகிறேன்.

    SRM group No (1) ஆக வர வேண்டும் என்று பாடுபட்டேன். SRMக்கு எந்த ஒரு பிரச்னை என்றால் முதலில் நான் நின்றேன். SRM என்று ஒரு universityயாக வளர்வதற்கு எங்கள் Group ஒரு காரணம்.

    எல்லா seatயும் full. எல்லா இடத்திலும் வேலை. எப்படி சாத்தியம். இது Vendharக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் SRM இல்லாத எல்லா College Chairmanக்கும் மதனை தெரியும். ஏன் என்றால் எனக்கு வேந்தர் மேல் உள்ள வெறி. அவர் மனம் வருத்தப்படக்கூடாது என்று அவருக்காக எல்லாம் செய்தேன்.

    மாணவர்கள் கல்லூரியில் செலுத்தும் பணம் குறைவாக இருக்கும். ஆனால் கல்லூரிக்கு போகும் பணம் நிறைவாக இருக்கும். எப்படி? எல்லாம் என் கையில் இருந்து. என் முயற்சி. என் தலைவனிடம் பேர் வாங்க வேண்டும். தலைவர் எப்போதும் என்னை கூட வைத்து கொள்ள வேண்டும் என்று வெறி. நீங்கள் நம்பாமல் இருக்கலாம்.

    என்னிடம் 8 வருடமாக உள்ள பெற்றோர் Address, மாணவர்கள் Phone நம்பர் உள்ளது நீங்கள் விசாரிக்கலாம். Tiruchi Medical College Permission கிடைக்கவில்லை. இரண்டு வருடமாக நடக்கவில்லை. யா முகம் வாடியது. நான் என்ன செய்தேன். எவ்வளவு செய்தேன் என்று அவருக்கு தெரியாது. ஆனால் என் நண்பர்களுக்கு தெரியும் எல்லாத்துக்கும் Proof உள்ளது.

    இந்த வருடம் P.6 and U.6 Medical admission NEET Exam இருந்தும் 102 Seat Fullஆக உள்ளது SRMயும் MGMம்மும். எப்படி? மாணவர்கள் Tiruchi Medical Collegeம் 1 வருடமாக வெயிட் செய்கிறார்கள் எப்படி? எல்லாம் நான் பட்ட உழைப்பு. IJK Party கட்சி தொடங்கி முதல் மாநாடு.

    Trainல் வெளி மாநில மாணவர்கள், 100 Bus மாணவர்கள் கலந்து கொண்டனர். எப்படி Bihar. election. 14 தொகுதில் IJK நின்றது எப்படி? கட்சி தொடங்கி 6 மாதம் இருக்கும் பொது எப்படி MLA.[Tirunelvi] election, Southல், IJK எப்படி வந்தது, BJP மாநாடு., Counsilor election., Puthukotai Bye election., Perabalur MP election, யார் செலவு செய்தது நான் தான்.

    நான் பொய் சொல்லவில்லை இல்லத்தை இணையதளத்தில் UTubeலிம் பார்க்கலாம். [சினிமா] ஒரு படத்தில் Director shankar ஐயா பெயரை கேவலப்படுத்தியதால் வந்தது தான் இந்த வேந்தர் மூவீஸ். எத்தனை படம் பண்ணினோம் எல்லாம் நஷ்டம்.

    தலைவா படம் இவர் பேர் போட்டதால் படத்தையே நிறுத்தி விட்டார்கள். linga, Payumpuli எல்லாம் நஷ்டம் இருந்தாலும் Vendhar movies நிற்கவே இல்லை. இன்னும் படம் எடுத்து கொண்டு இருக்கிறது.

    என் ஐயா பெயரில் உள்ளது. அதனால் எல்லாம் நல்ல தானா போகுது அப்புறம் ஏன் இந்த முடிவு! ஐயா குடும்பத்துக்கு சந்தேகம் வருது. என்ன சந்தேகம். மதன் இவர் பையனா? இவர் என் மதனுக்கு என் முதலிடம் கொடுக்கிறார்.

    ஐயாவிற்கு Presssure. ஆனால் என்னை விட்டு கொடுக்கவில்லை எனக்கு வந்தது என்ன? Income tax raid 6 ½ கோடி போச்சு., ஒரு பொய் என் மேல் MR. Ravi recommadationள்ள, Ravi சார் கட்சியில் வரார் Admissionக்கு மதனை வரவிட கூடாது. கட்சியில் மதனை வெளியே கொண்டு வர வேண்டும் ஐயாவையும் மதனையும் பிரிக்கணும்.

    ஏதோ சொத்தை என் பெயரில் எழுதி வைத்து விடுவார் என்று, Kerala போய் பில்லி சூனியம் வர வைத்து விட்டாச்சு.

    எனக்கு அதை பற்றி கவலை இல்லை. ஆனா கடந்த 6 மாதமாக ஐயா என்னிடம் பேசுவது இல்லை. Phone கட்டு பண்ணார் நேத்து கூட காசு அனுப்ப சொல்லு Ranga Babu சார் போன் பண்றார். Sukumar phone பண்றார். நான் யாருக்கு வாழ்ந்தனோ, யாருக்கு செலவு பண்ணனோ அவர் பேசுவது இல்லை. Electionக்கு கூப்பிடவில்லை. அதனால் இந்த முடிவு. நான் போறேன்.

    Already இது புதுசு இல்லை Nov 30 Try பண்ணினேன் முடியல் So இப்போது நான் போறேன். என் கொளிக்கைகள் Vendhar familyக்கு மதன் போயிட்டானே SRM அவருக்கு என்ன சம்மதம் இல்லை ரவி சொல்வார். ஆனால் இந்த தடவை அது நடக்காது.

    (1) 8 வருடமாக நான் SRMக்கு போட்ட student list நான் இதில் சேர்த்து இருக்கிறேன்.(2) Vendhar movies, Vendhar TV Bank Statement connection பார்த்தால் தெரியும்.(3) Income tax raidயில் எடுத்த Payment ரேபுந்து SRM வாங்கி உள்ளது.(4) Vendhar TV Satellite Telecast ஆகும் படங்களில் நிறைய படங்கள் என் பெயரில் உள்ளத இருக்கும்.

    அதுக்கு எந்த ஒரு Payment நான் வாங்கி இருக்க மாட்டேன். இன்னும் நிறைய மேட்டர் இருக்கு. நான் இல்லாவிட்டால் என்ன. என் உயிர் நண்பர்கள் Pressக்கு வருவார்கள்.

    நான் last ஆக கேட்பது என்னனா.இந்த நான் அனுப்பிய list P6/U6 மாணவர்கள் எல்லாம் College சேரனும்.அவர்களிடம் வாங்கி பணம் உங்களிடம் முழுமையாக கொடுக்க பட்டு உள்ளது. NEET வந்தால் அவர்களுக்கு அந்த பணம் திரும்ப கொடுக்கப்படவேண்டும்.

    Vendhar movies மேல் எந்த கடனும் வர கூடாது. இதையும் மீறி நீங்கள் என் நண்பர்களோ, என் குடும்பத்தையோ தொந்தரவு செய்தால் உங்களை கடவும் மன்னிக்க மாட்டார். So ஐயா தான் உங்களை பார்க்காமல் போகிறேன் என் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.

    இவ்வாறு வேந்தர் மூவிஸின் லெட்டர் பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தை எழுதிய மதனின் கதி என்ன என்பது இதுவரை மர்மமாக உள்ளது.

    Latest Post ஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..! அஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..! காக்கி சட்டையில் கலக்கும் ஜெயம்ரவி-அர்விந்த் சாமி..! கமல் வழியில் சிவகார்த்திகேயனின் சூப்பர் முயற்சி..! சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.! கார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..! களத்தூர் கண்ணம்மா முதல் சாவித்திரியின் வாழ்க்கை படம் வரை..! ‘கண்ணா… இருபத்தி எட்டே நாள்; ச்சும்மா ரெண்டு கோடி’ கபாலிடா..!

    மூலக்கதை