பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை
பாகிஸ்தானில் கடற்படை அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அந்நாட்டு ராணுவ கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக அந்நாட்டு பிரபல செய்தி நிறுவனமான டான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2014 செப். 6 ல் பாகிஸ்தானில் உள்ள கடற்படை தளத்தில் ஐ.எஸ்., பயங்கராவதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஐ.எஸ்., சுக்கு உதவியதாக 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற மேஜர் சையீதுஅகமது கூறுகையில்:
எனது மகன் அகமது மற்றும் 4 அதிகாரிகள் மீதான குற்றம் தொடர்பாக ரகசியமாக விசாரிக்கப்பட்டு ரகசிய தீர்ப்பு அளிக்கப்பட்டடுள்ளது. எனது தரப்பு நியாயத்தை கேட்க கூட நேரம் தரவில்லை. இது தொடர்பாக அடவகேட் ஜெனரலுக்கு கடிதம் எழுதியும் பயனில்லை என்றார்.
இர்பானுல்லா, முகமது அகமது, நசீர், ஹாசீம்நசீர் ஆகிய 5 அதிகாரிகளுக்கும் தண்டனை வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் இருப்பதால் 5 பேருக்குரிய தண்டனை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றப்படலாம் என அஞ்சுவதாக குற்றவாளியின் ஒருவரான தந்தை ஒருவர் கூறினார்.தற்போது 4 பேரும் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
