சுவிஸில் கார் மீது பயங்கரமாக மோதிய ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
பேர்ன் மாகாணத்தில் இருந்து InterRegio என்ற பயணிகள் ரயில் இன்று காலை 7 மணியளவில் புறப்பட்டுள்ளது.
ரயில் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் Oberried மற்றும் Niederried ஆகிய இரு பகுதிகளுக்கு மத்தியில் வரும்போது தண்டவாளத்தின் குறுக்கே ஒரு கார் நின்றுள்ளது.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் ரயில் கார் மீது பயங்கரமாக மோதி தூள் தூளாக்கி விட்டு சென்றுள்ளது.
எனினும், இந்த விபத்தில் ரயில் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து Jolanda Egger என்ற பொலிஸ் அதிகாரி பேசியபோது, ‘இன்று அதிகாலை சாலையில் சென்றுக்கொண்டு இருந்த கார் ஒன்று திடீரென தடுமாறி ரயில் தண்டவாளத்தில் ஏறி நின்றுள்ளது.
காரை மேலும் செலுத்த முடியாததால், அதில் பயணித்த அனைவரும் பத்திரமாக வெளியேறியுள்ளனர்.
பயணிகள் வெளியேறிய பிறகு கார் மீது ரயில் மோதியதால், எவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
கார் மீது ரயில் மோதிய இந்த விபத்தை தொடர்ந்து பிற்பகல் வரை இப்பகுதி வழியாக சென்ற ரயில் சேவைகள் முற்றிலுமாக பாதிப்படைந்தது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
