நள்ளிரவில் கடத்தல் கும்பலை வேட்டையாடிய பொலிஸ்: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
தெற்கு பிரான்ஸில் உள்ள Marseilles என்ற நகரில் கடத்தல் கும்பலின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.
இதே பகுதியில் கடந்தாண்டு பொலிசார் நடத்திய அதிரடி வேட்டையில் 19 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்பில் கடத்தல்காரர்கள் இருப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலை பெற்ற பொலிசார் கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர்.
அப்போது, பொலிசார் மற்றும் கடத்தல் கும்பலுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது.
சில நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலின் விளையாக கும்பலை சேர்ந்த 3 பேர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் 8 பேர் காயமுற்றனர். இந்த தாக்குதலில் பொலிஸ் தரப்பிற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் குறித்து நகர மேயரான Samia Ghali என்பவர் பேசியபோது, ‘எதிர்கால தலைமுறையினர் அமைதியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை.
வன்முறையான இந்த செயல்களை தடுத்து நிறுத்து அரசு இனியும் தயங்க கூடாது’ என கருத்து தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
