நபர் மீது வாகனம் ஏற்றி கொன்றது யார்? தகவல் கொடுப்பவருக்கு 25,000 டொலர் சன்மானம் (வீடியோ இணைப்பு)
ஒட்டாவா நகரை சேர்ந்த மைக்கேல் மோர்லாங்(30) என்பவர் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி அதிகாலை 5 மணியளவில் வெளியே புறப்பட்டுள்ளார்.
மறுநாள்(ஆகஸ்ட் 12ம் திகதி) மைக்கேலின் பிறந்தநாள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை உற்சாகமாக கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுமார் 5.30 மணியளவில் பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில், ‘சாலையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும், அவரிடம் எந்த அசைவும் இல்லை’ என தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, சாலை ஓரமாக மைக்கேல் ரத்த வெள்ளத்தில் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளார்.
அப்பகுதியை சோதனை செய்தபோது மைக்கேல் மீது வாகனம் மோதி விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக விசாரணையை தீவிரப்படுத்தியும் குற்றவாளி யார் என்பதை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று ஒட்டாவா நகர பொலிசார் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘விபத்தில் உயிரிழந்த மைக்கேலின் பெற்றோர் கடந்த 3 ஆண்டுகளாக பெரும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மைக்கேல் மீது மோதி கொன்றுவிட்டு அந்த குற்றவாளி எங்கோ ஒரு இடத்தில் வசித்து வருகிறான்.
இதுவரை 100 துப்புகள் கிடைத்தும் குற்றவாளி யார் என்பதை பொலிசாரால் உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே, குற்றவாளி குறித்து பொலிசாருக்கு தகவல் தரும் நபருக்கு 25,000 டொலர் சன்மானம் வழங்கப்படும்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
