அப்பாவிகள் போல் நாடகமாடிய கொள்ளையர்கள்: உதவிக்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட விபரீதம்
சுவிஸின் Schwyzer மாகாணத்தில் உள்ள Einsiedeln என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் 39 வயதான நபர் ஒருவர் காரில் பயணித்துள்ளார்.
அப்போது சாலையின் ஓரத்தில் கார் ஒன்று பழுதாகியதாக கூறி இருவர் உதவிக்காக நபர்களை எதிர்ப்பார்த்து நின்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த சாலை வழியாக வந்த நபரிடம் அவர்கள் இருவரும் உதவி கேட்டுள்ளனர்.
நள்ளிரவு நேரம் என்பதால், அவர்களுக்கு உதவ நினைத்த நபர் தனது காரை விட்டு இறங்கி அவர்களின் கார் அருகே சென்றுள்ளார்.
அப்போது, காருக்கு அருகே இருந்த ஒருவர் திடீரென அவர் மீது பாய்ந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
இருவரும் வழிப்பறி கொள்ளையர்கள் என்றும், கார் பழுதாகியுள்ளதாக நாடகமாடியுள்ளது அவருக்கு அப்போது தான் புரிந்துள்ளது.
எனினும், இருவரையும் எதிர்க்கொள்ள முடியாததால் தன்னிடம் இருந்த ஆயிரக்கணக்கான பிராங்குகளை கொள்ளையர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
பணத்தை பெற்ற இருவரும் பழுதாகியதாக கூறப்பட்ட காரில் ஏறி தப்பியுள்ளனர்.
இந்த வழிப்பறி சம்பவமாக பாதிக்கப்பட்ட அந்த நபர் பொலிசாரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து கொள்ளையர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
