இருவரை கொன்றுவிட்டு பேஸ்புக்கில் பெருமையாக பேசிய இளம்பெண்: நடந்தது என்ன?
கலிபோர்னியா மாகாணத்தில் Brianna Longoria என்ற 18 வயது இளம்பெண் வசித்து வருகிறார்.
இவரும் இவருடைய இரண்டு தோழிகளும் சில தினங்களுக்கு முன்னர் காரில் வெளியே புறப்பட்டுள்ளனர்.
லேன்கஸ்டர் என்ற பகுதிக்கு கார் வந்தபோது, அங்கிருந்த சிக்னலை மீறி காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது எதிரே வந்த டொயோட்டோ கார் மீது பலமாக மோதியதில் இரு கார்களும் பலத்த சேதமடைந்தன.
டொயோட்டோ காரில் பயணம் செய்த இரண்டு ஆண்களும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
ஆனால், கார் ஓட்டிய இளம்பெண் மற்றும் அவரது இரு தோழிகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மூவரையும் மீட்ட பொலிசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பொலிசார் சோதனை செய்தபோது மூவரும் போதை மருந்து அருந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த விபத்திற்கு பிறகு, இளம்பெண் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘இன்று நடந்த கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆனால், இன்றைய செய்திகளில் நான் எல்லா இடத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறேன்’ என பெருமையாக பதிவு வெளியிட்டுள்ளார்.
எனினும், இதுவரை இளம்பெண் மீது பொலிசார் எவ்வித குற்ற வழக்குகளும் பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
