இரண்டாக உடைந்த ஜேர்மனியை இணைத்த மாபெரும் அரசியல் தலைவர்: உடல்நலக்குறைவால் காலாமானார்
இரண்டாம் உலகப்போர் நிறைவு பெற்ற பின்னர் ஏற்பட்ட விளைவுகளால் ஜேர்மனி நாடு கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியாக இரண்டாக உடைந்தது.
இதன் பின்னர் ஜேர்மன் சுவரும் எழுப்பப்பட்டது. இந்த நேரத்தில் மேற்கு ஜேர்மனி அரசாங்கத்தின் வெளியுறவு துறை அமைச்சராக Hans-Dietrich Genscher பணியாற்றி வந்துள்ளார்.
மேலும், ஜேர்மனி வரலாற்றில் அதிக ஆண்டுகள் வெளியுறவுத் துறை அமைச்சராக நீடித்தவரும் இவர் தான்.
பல்வேறு காலக்கட்டங்களில் பல கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் மூலம் ஜேர்மனியை இணைக்கு முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இவரது முயற்சியின் பலனாக கடந்த 1990ம் ஆண்டு ஜேர்மன் சுவர் தகர்க்கப்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனி ஒன்றாக இணைந்தது.
வரலாற்று சிறப்பு பெற்ற இந்த அரசியல் தலைவர் 89 வயதை அடைந்ததால், அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன் தினம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜேர்மனியை இணைத்ததில் மாபெரும் பங்காற்றிய இவரது மறைவுக்கு அந்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
