வாலிபர் சாப்பிட்ட உணவில் இறந்த எலியின் உடல்: தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு பதிவு
பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் 13-வது வட்டத்தில் Carrefour என்ற சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் 28 வயதான வாலிபர் ஒருவர் இந்த சூப்பர் மார்க்கெட்டில் பாஸ்த்தா உணவை வாங்கிச் சென்று அருகில் உள்ள ஒரு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார்.
பாதி உணவை சாப்பிட்ட பிறகு, உணவிற்கு அடியில் இறந்த நிலையில் ஒரு எலியின் உடல் இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வாந்தியும் எடுத்துள்ளார்.
பின்னர், Daunat என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த உணவை எடுத்துக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டிற்குள் அவர் சென்றுள்ளார்.
ஆனால், அங்குள்ள மேலாளர் ஒருவர் 10 யூரோவை இழப்பீடாக கொடுத்து வாலிபரை சரிக்கட்ட முயன்றுள்ளார்.
பணத்தை நிராகரித்த அந்த வாலிபர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், இறந்துப்போன அந்த எலியின் உடல் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வாலிபர் பேசியபோது, ‘உணவில் இறந்த நிலையில் எலி இருந்ததை கண்ட பிறகு என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை.
இதனால் என்னுடைய உடல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாஸ்த்தா உணவை தயாரித்து வெளியிட்ட Daunat நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், 4,000 யூரோ வரை இழப்பீடு பெறுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
