‘மேக்-அப்’ செய்ய வரி பணத்தை செலவிட்ட பிரதமரின் மனைவி: சூட்டை கிளப்பும் புதிய சர்ச்சை (வீடியோ இணைப்பு)
பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூன் கலந்துக்கொள்ளும் அரசு அல்லது பொது நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், அவர் பொதுவாக இரண்டு விதமான உடுப்புகளை மட்டுமே விரும்பி அணிவார்.
ஒன்று, அரசு நிகழ்ச்சிகளுக்கு தேவையான ’கோட்-சூட்’ மற்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும்போது ‘நீல வண்ணத்தில் போலோ சட்டையை’ மட்டுமே அவர் எப்போதும் அணிவார்.
ஆனால், பிரதமரின் அலங்காரத்தை மிஞ்சும் வகையில் அவரது மனைவியான சமந்தா கமெரூன் தினம் ஒரு உடுப்பிலும், அலங்காரத்திலும் காட்சியளித்து அசத்துவார்.
இது தான் தற்போது சமந்தாவிற்கும், கமெரூனிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, சமந்தா என்னென்ன உடுப்புகளை அணிய வேண்டும்? எப்படி தன்னை விதவிதமாக அலங்காரம் செய்துக்கொள்ள வேண்டும்? என்ற ‘மேக்-அப் டிப்ஸ்’ கொடுக்க Rosie Lyburn என்ற 28 வயதான மொடலை சமந்தா நியமித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் வருட்த்திற்கு சுமார் 53,000 பவுண்ட் ஊதியமாக இவர் பெற்று வருவது தான் இப்போது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பனாமா நிறுவனங்களில் பிரதமர் கமெரூனின் தந்தையான இயான் கமெரூன் ரகசியமாக வைத்திருந்த முதலீட்டில் தானும் பயன் பெற்றதாக பிரதமர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்த சூழலில் தற்போது பிரதமரின் மனைவியும் வரிப் பணத்தை சுயநலத்திற்காக பயன்படுத்தியுள்ளது இருவருக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
