400 ஆண்டு தடையை மீறி சனி பகவான் கோவிலுக்குள் நுழைந்த பெண்கள்
400 ஆண்டுகளாக பெண்கள் நுழையக் கூடாது என்ற தடையை சட்டப்பூர்வமாக உடைத்து சிங்கனாப்பூர் சனி பகவான் கோவிலுக்குள் பெண்கள் சென்று வழிபாடு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டம் அருகே உள்ள சிங்கனாப்பூர் சனி பகவான் கோவில் கருவறைக்குள் பெண்கள் சென்று வழிபட 400 ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது.
பூமாதா என்ற பெண்கள் அமைப்பினர் இதனை கண்டித்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் கடந்த 1ம் திகதி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த தீர்ப்பில், கோவிலுக்குள் சென்று வழிபடுவது பெண்களின் அடிப்படை உரிமை.
பெண்கள் கோவிலுக்குள் செல்வதை யாராவது தடுத்தால், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கோவிலின் நிர்வாக குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த ஆலோசனையின் முடிவில் பெண்களை கோவில் கருவறைக்குள் அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பெண்கள் சனீஸ்வர பகவான் சிலை அமைந்துள்ள உட்பிரகாரத்திற்குள் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
