நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் முன்பு உரையாற்றிய பிடல் காஸ்ட்ரோ (வீடியோ இணைப்பு)
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
கியூபாவில் கம்யூனிசம் வேரூன்ற முக்கிய காரணமாக இருந்தவர் பிடல் காஸ்ரோ.
கியூபாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த பட்டிஸ்டாவை கடந்த 1959 ஆண்டு தனது நண்பர் சே குவேராவுடன் இணைந்து விரட்டியடித்தார்.
பின்னர் அந்நாட்டின் அதிபராக காஸ்ட்ரோ பதவியேற்றார். இதற்கிடையில் கியூபா மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா காஸ்ரேவை கொல்ல பலமுறை முயற்சி செய்தது.
எனினும் அதிலிருந்த தப்பிய காஸ்ட்ரோ தனது நாட்டை முன்னேற்ற பெரும் முயற்சிகள் மேற்கொண்டார்.
பின்னர், வயது முதிர்வு காரணமாக கடந்த 2008ஆம் ஆண்டு தனது சகோதரரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தார்.
அப்போதிலிருந்து வீட்டில் ஓய்வு எடுத்துவரும் காஸ்டோ அவ்வப்போது பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
கடைசியாக கடந்த ஆண்டு யூலை மாதம் பொதுநிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார்
இந்நிலையில், கடந்த 2007ஆம் இறந்துபோன பெண் போராளி ஒருவரின் பிறந்துநாள் தொடர்பாக ஹவானாவின் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில்& கலந்துகொண்டார். இறந்த பெண் போராளி குறித்து சிறிது நேரம் பேசிய காஸ்ட்ரோ பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடினார்.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவுக்கு வந்ததை விமர்சித்து அரசாங்க பத்திரிகையில் காஸ்ட்ரோ எழுதிய கட்டுரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
