”வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு உள்ளதா?”: நிருபர்களின் கேள்விக்கு கனேடிய பிரதமர் அதிரடி பதில்
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபதிபர்கள் பலர் வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வளர்ச்சிப் பணிகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள Sudbury நகருக்கு நேற்று சென்றுள்ளார்.
அப்போது, ‘பனாமா நிறுவனங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களில் கனேடிய பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரின் முதலீடுகள் உள்ளதா’? என பிரதமர் ஜஸ்டினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பிரதமர் பதிலளித்தபோது, ‘பனாமா பேப்பர்ஸில் ஜஸ்டின் ட்ரூடோ என்ற பெயர் இருக்காது.
என்னுடைய பெயர் மட்டுமின்றி என்னுடைய குடும்ப உறுப்பினர்களின் பெயரும் அதில் இடம்பெற்று இருக்காது.
இதுமட்டுமில்லாமல், எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் எந்தவிதமான முதலீடுகளும் இல்லை’ என ஜஸ்டின் ட்ரூடோ உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மேலும், என்னுடைய முதலீடுகள் கனடா நாட்டிற்குள் எங்கு உள்ளது என்பது பற்றி என்னுடைய குடிமக்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாகவும், முதலீடுகள் தொடர்பாக எந்தவித ரகசிய கணக்குகளையும் தொடங்கவில்லை என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தற்போது உலகளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், கனடா நாட்டை சேர்ந்த பல கோடீஸ்வரர்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
