”வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு உள்ளதா?”: நிருபர்களின் கேள்விக்கு கனேடிய பிரதமர் அதிரடி பதில்
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபதிபர்கள் பலர் வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வளர்ச்சிப் பணிகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள Sudbury நகருக்கு நேற்று சென்றுள்ளார்.
அப்போது, ‘பனாமா நிறுவனங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களில் கனேடிய பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரின் முதலீடுகள் உள்ளதா’? என பிரதமர் ஜஸ்டினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பிரதமர் பதிலளித்தபோது, ‘பனாமா பேப்பர்ஸில் ஜஸ்டின் ட்ரூடோ என்ற பெயர் இருக்காது.
என்னுடைய பெயர் மட்டுமின்றி என்னுடைய குடும்ப உறுப்பினர்களின் பெயரும் அதில் இடம்பெற்று இருக்காது.
இதுமட்டுமில்லாமல், எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் எந்தவிதமான முதலீடுகளும் இல்லை’ என ஜஸ்டின் ட்ரூடோ உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மேலும், என்னுடைய முதலீடுகள் கனடா நாட்டிற்குள் எங்கு உள்ளது என்பது பற்றி என்னுடைய குடிமக்களிடம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாகவும், முதலீடுகள் தொடர்பாக எந்தவித ரகசிய கணக்குகளையும் தொடங்கவில்லை என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தற்போது உலகளவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், கனடா நாட்டை சேர்ந்த பல கோடீஸ்வரர்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
