175 தொழிலாளிகளை கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்: சிரியா ராணுவம் அதிர்ச்சி தகவல்
சிரியாவின் தலைநகரமான டமாகஸில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் Badiyah என்ற சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சுமார் 300 தொழிலாளிகளை சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர்.
இந்நிலையில், சிரியா ராணுவம் மூலம் பெறப்பட்ட தகவல்களை சிரியா செய்தி ஏஜென்சியான சானா ஒரு அதிர்ச்சி தகவல்களை நேற்று வெளியிட்டுள்ளது.
அதில், கடத்தப்பட்ட 300 தொழிலாளிகளில் 175 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளதாக பரபரப்பு செய்தினை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை சிரியா தொழிற்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழிற்சாலையின் நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், திங்கள் கிழமை முதல் கடத்தப்பட்ட தொழிலாளிகளை தொடர்புக்கொள்ள முடியவில்லை என அச்சம் தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
