பயிற்சியாளராக யாருக்கு முன்னுரிமை? ஊடகவியலாளரை கலாய்த்த ரெய்னா!
சமீபத்தில் குஜராத் லயன்ஸ் ஐ.பி.எல். அணி சார்பாக அதன் அணித்தலைவர் சுரேஷ் ரெய்னா ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அப்போது பல கேள்விகளை முன் வைத்த ஊடகவியலாளர்கள், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் வெளி நாட்டவருக்கா இல்லை இந்தியருக்கா முன்னுரிமை என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரை பார்த்து, நீங்கள் உங்கள் சொந்த மனைவியுடன் இயல்பாக இருப்பீர்களா இல்லை வேறொருவருடனா என பதிலளித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னாவின் இந்த கொமடி பதில் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் அனைவரையும் அறை அதிரும்படி சிரிக்க வைத்துள்ளது.
சாதாரணமாக ஊடகவியலாளர்களிடம் கவனமுடம் பதில் அளிக்கும் சுரேஷ் ரெய்னா, கொமடியாக பதில் அளித்திருப்பது ஊடகவியலாளர்களுக்கு வியப்பை ஏற்படித்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் டோனியிடம் ஓய்வு பெறுவது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளருக்கு அவர் நக்கலுடன் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.