விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டினால் அதிரடி பரிசு: ஜேர்மனியில் அறிமுகமாகும் புதிய வசதி
ஜேர்மனியை சேர்ந்த Allianz என்ற மிகப்பெரிய காப்பீடு நிறுவனம் தான் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் BonusDrive என்ற அப்பை(App) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அப் வாகனத்தில் பொருத்தப்பட்டவுடன் காரின் ஒட்டுமொத்த அசைவுகளையும் பதிவு செய்ய தொடங்கி விடும்.
அதாவது, கார் புறப்பட்ட பிறகு ஓட்டுனர் எவ்வளவு வேகத்தில் ஓட்டுகிறார்? எப்படி பிரேக் போடுகிறார்? சாலையில் உள்ள வளைவுகளில் எப்படி பாதுகாப்பாக திரும்புகிறார்? உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்யும்.
உதாரணத்திற்கு, ஒரு நபர் 100 கிலோ மீற்றர் பயணம் செய்கிறார் என்றால், அந்த 100 கி.மீ தூரத்தை எவ்வளவு பாதுகாப்பாக ஓட்டியிருக்கிறார் என்பதை கணக்கிட்டு ‘தங்கம், வெள்ளி, வெண்கலம்’ உள்ளிட்ட மதிப்பீட்டை(Rating) அளிக்கும்.
இவ்வாறு ஒரு வருடம் முழுவதும் கணக்கிட்டு வருடத்தின் இறுதியில் ஒட்டுமொத்த பயணத்திற்கும் ஒரே மதிப்பீடு அளிக்கும்.
இந்த மதிப்பீடு தங்கமாக இருந்தால், ஓட்டுனர் செலுத்தும் காப்பீட்டு பணத்தில் 30 சதவிகிதம் ஓட்டுனருக்கே திரும்ப அளிக்கப்படும்.
மதிப்பீடு வெள்ளியாக இருந்தால் 20 சதவிகிதமும், வெண்கலமாக இருந்தால் 10 சதவிகிதமும் காப்பீட்டு பணத்தை திரும்ப ஓட்டுனருக்கே அளிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து காப்பீட்டு நிறுவன நிர்வாகியான Frank Sommerfeld என்பவர் பேசுகையில், ‘இந்த வசதி 28 வயது வரை உள்ள இளம் ஓட்டுனர்களை குறிவைத்து அறிமுகப்படுத்தவுள்ளது. ஏனெனில், இந்த வயது உடையவர்கள் தான் அதிகளவில் காப்பீட்டு தொகை செலுத்த வேண்டியுள்ளதாக’ அவர் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
