ஆம், வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு இருந்தது: பிரித்தானிய பிரதமர் ஒப்புதல் (வீடியோ இணைப்பு)
தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் ஒப்புக்கொண்டுள்ளார்.
'பனாமா லீக்ஸ்' என்றழைக்கப்படும் ரகசிய ஆவண தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 12 நாடுகளின் இந்நாள், முன்னாள் அரசியல் தலைவர்களின் பெயர்கள் பனாமா லீக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூனின் தந்தை இயன் கமெரூனும் ஒருவர்.
கடந்த 2010ஆம் ஆண்டு இயன் இருந்த பிறகு வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் மூலம் டேவிட் கமெரூனும் பலன் அடைந்துவந்ததாக கூறப்பட்டது.
எனினும் இந்த தகவலை டேவிட் கமெரூன் மறுத்தார். இந்நிலையில் தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான் என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டேவிட் கமெரூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, கடந்த காலங்களில் என்னிடம் பங்குகள் இருந்தன. எனது தந்தை ஒரு பங்கு தரகர் என்பதால் இது இயல்பான ஒன்றுதான்.
எனினும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதால் கடந்த 2010ஆம் ஆண்டே அவற்றை விற்றுவிட்டேன். எனக்கும் எனது மனைவி சமந்தாவுக்கு 5000 யூனிட்கள் வரை பங்குகள் இருந்தன.
அதன் மதிப்பு 30 ஆயிரம் பவுண்டாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த ஒப்புதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து கமெரூன் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கூறி வருகின்றனர்.
வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு இருந்தது உண்மைதான் தான் பிரதமரே ஒப்புக்கொண்ட சம்பவம் பெரும் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
