ஆம், வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு இருந்தது: பிரித்தானிய பிரதமர் ஒப்புதல் (வீடியோ இணைப்பு)
தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் ஒப்புக்கொண்டுள்ளார்.
'பனாமா லீக்ஸ்' என்றழைக்கப்படும் ரகசிய ஆவண தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 12 நாடுகளின் இந்நாள், முன்னாள் அரசியல் தலைவர்களின் பெயர்கள் பனாமா லீக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூனின் தந்தை இயன் கமெரூனும் ஒருவர்.
கடந்த 2010ஆம் ஆண்டு இயன் இருந்த பிறகு வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருக்கும் பங்குகள் மூலம் டேவிட் கமெரூனும் பலன் அடைந்துவந்ததாக கூறப்பட்டது.
எனினும் இந்த தகவலை டேவிட் கமெரூன் மறுத்தார். இந்நிலையில் தனது தந்தையின் வெளிநாட்டு நிறுவனங்களில் தனக்கு பங்கு இருந்தது உண்மைதான் என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டேவிட் கமெரூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, கடந்த காலங்களில் என்னிடம் பங்குகள் இருந்தன. எனது தந்தை ஒரு பங்கு தரகர் என்பதால் இது இயல்பான ஒன்றுதான்.
எனினும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதால் கடந்த 2010ஆம் ஆண்டே அவற்றை விற்றுவிட்டேன். எனக்கும் எனது மனைவி சமந்தாவுக்கு 5000 யூனிட்கள் வரை பங்குகள் இருந்தன.
அதன் மதிப்பு 30 ஆயிரம் பவுண்டாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த ஒப்புதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து கமெரூன் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கூறி வருகின்றனர்.
வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு இருந்தது உண்மைதான் தான் பிரதமரே ஒப்புக்கொண்ட சம்பவம் பெரும் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
