தாடி இல்லாவிட்டால் அபராதம்.. பர்தா அணியாவிட்டால் தண்டனை: ஐ.எஸ். பிடியில் உள்ள மக்களின் நிலை (வீடியோ இணைப்பு)
ஐ.எஸ். தீவிரவாதிகளால் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட குடும்பம் ஒன்று தாங்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் மனித கேடயமாக உள்ளவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஈராக்கின் மக்மோரில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வரும் அபு இஸ்ரா என்பவர் இது தொடர்பாக கூறியதாவது, எங்கள் கிராமத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை கேடயமாக பயன்படுத்து தங்களை தற்காத்துக்கொண்டனர்.
மேலும் ஏராளமான கட்டளைகள் போட்டனர். ஆண்கள் கட்டாயம் நீளமாக தாடி வளர்க்க வேண்டும்.
தாடி சிறிதாக இருக்கிறது என்று என்னிடமே இருமுறை அபராதம் பெற்றுள்ளனர். அதேபோல் பெண்களுக்கு பர்தா கட்டாயம்
எங்கள் வீட்டின் பின்புறம் சிறுநீர் கழிக்கசென்ற எனது 12 வயது மகள் பர்தா அணியவில்லை என்பதற்காக அவளுக்கு கடும் தண்டனை அளித்தனர்.
அவர்களிடம் வேலை செய்பவர்களுக்கு சரியாக சம்பளம் தர மாட்டார்கள். ஒருநாள், நான் வேலையை விட்டு நிற்கபோவதாக சொன்னதற்கு எனது தலையை தனியாக வெட்டி விடுவதாக மிரட்டினர்.
மேலும் அவர்கள் செய்யும் கொடூரமாக கொலைகளை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினர். மேலும் எங்களை மனித கேடயமாகவும் பயன்படுத்தினர் என்று தெரிவித்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
