தாடி இல்லாவிட்டால் அபராதம்.. பர்தா அணியாவிட்டால் தண்டனை: ஐ.எஸ். பிடியில் உள்ள மக்களின் நிலை (வீடியோ இணைப்பு)
ஐ.எஸ். தீவிரவாதிகளால் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட குடும்பம் ஒன்று தாங்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.
தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் மனித கேடயமாக உள்ளவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஈராக்கின் மக்மோரில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வரும் அபு இஸ்ரா என்பவர் இது தொடர்பாக கூறியதாவது, எங்கள் கிராமத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள் அங்குள்ள மக்களை கேடயமாக பயன்படுத்து தங்களை தற்காத்துக்கொண்டனர்.
மேலும் ஏராளமான கட்டளைகள் போட்டனர். ஆண்கள் கட்டாயம் நீளமாக தாடி வளர்க்க வேண்டும்.
தாடி சிறிதாக இருக்கிறது என்று என்னிடமே இருமுறை அபராதம் பெற்றுள்ளனர். அதேபோல் பெண்களுக்கு பர்தா கட்டாயம்
எங்கள் வீட்டின் பின்புறம் சிறுநீர் கழிக்கசென்ற எனது 12 வயது மகள் பர்தா அணியவில்லை என்பதற்காக அவளுக்கு கடும் தண்டனை அளித்தனர்.
அவர்களிடம் வேலை செய்பவர்களுக்கு சரியாக சம்பளம் தர மாட்டார்கள். ஒருநாள், நான் வேலையை விட்டு நிற்கபோவதாக சொன்னதற்கு எனது தலையை தனியாக வெட்டி விடுவதாக மிரட்டினர்.
மேலும் அவர்கள் செய்யும் கொடூரமாக கொலைகளை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினர். மேலும் எங்களை மனித கேடயமாகவும் பயன்படுத்தினர் என்று தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
