சுவிஸில் பயங்கரம்: தண்டவாளத்தில் நின்ற பெண் மீது விரைவு ரயில் மோதி பலி
சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் இருந்து விரைவு ரயில் ஒன்று நேற்று காலை 10.30 மணியளவில் புறப்பட்டுள்ளது.
பேர்ன் மாகாணத்தில் உள்ள Ligerz என்ற பகுதிக்கு ரயில் வந்தபோது, தூரத்தில் தண்டவாளத்திற்கு நடுவே ஒருவர் நிற்பதை ரயில் ஓட்டுனர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக வேகத்தை குறைக்கும் கருவியை இயக்கியுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக பாய்ந்து வந்த ரயில் பெண் மீது மோதி ஏறிச்சென்றுள்ளது.
இந்த விபத்தில் பெண் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் விசாரணையை முடக்கியுள்ளனர்.
பொலிஸ் அதிகாரியான Christoph Gnagi என்பவர் நடத்திய விசாரணையில், ‘பெண்ணின் உடல் அடையாளம் தெரியாதவாறு நசுங்கியுள்ளதால், அவர் யார்? என்ன வயது? என்பது உள்ளிட்ட தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும், முதற்கட்ட விசாரணையில் ’பெண் தண்டவாளத்தை கடப்பதற்காக நின்றபோது இந்த மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என்றும், இது விபத்தாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், தற்கொலை செய்துகொண்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
