பெண் பொலிசார் மீது வாகனத்தை ஏற்றி கொன்ற நபர் யார்?: பொலிசார் தீவிர விசாரணை (வீடியோ இணைப்பு)
பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Langford என்ற நகரில் சாரா பெக்கட்(32) என்ற பெண் பொலிசார் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
பொலிஸ் வாகனத்தில் நகரத்தை சுற்றி வரும்போது, அவரது காரில் மற்றொரு கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாரா பெக்கட் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி உயிரிழந்ததை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை அன்றே கைது செய்தனர்.
ஆனால், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் குற்றமற்றவர் என நிரூபனம் ஆனதால் நேற்று பொலிசார் அவரை விடுதலை செய்தனர்.
இந்த விசாரணையை நடத்தி வரும் Janelle Shoihet என்ற பொலிஸ் அதிகாரி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது, ‘சாரா பெக்கட் ஒரு திறமையான பொலிஸ் அதிகாரி. ஆனால், அவரது மரணம் காவல் துறைக்கு ஒரு பெரும் இழப்பு.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரை நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், அதிகாலையில் நிகழ்ந்த இந்த மரணம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும், இது குறித்து தகவல் அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்புக் கொள்ளலாம்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
