நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு: 3 நபர்கள் படுகாயம்
ஆந்திர மாநிலம் சித்தூரில் நீதிமன்ற வளாகத்திலேயே குண்டு வெடித்துள்ள சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாகன நிறுத்த பகுதியில் திடீரென்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா மற்றும் அவரின் கணவர் ஆகியோர் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.
இதில் அவர்களின் உறவினர்களே ஈடுபட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து,
இது தொடர்பான வழக்கு சித்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளை பொலிசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது, வாகன நிறுத்த பகுதியில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. பதட்டமான நிலையில் நீதிமன்றத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடியுள்ளனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் உயிர் அபாயம் எதுவும் இல்லை எனவும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,
நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
