மேடையில் பாம்புகளுடன் ஆட்டம் போட்ட பெண் பாடகர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)
மேற்கு ஜாவாவில் உள்ள Karawang என்ற நகரில் இர்மா ப்ளூ(29) என்ற பெண் ’பாப் பாடகர்’ ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
இவரது கச்சேரியில் வழக்கமாக சிறிய பாம்புகள் முதல் மலைப்பாம்புகளை வரை தனது உடலில் சுற்றிக்கொண்டு பாடல்களை பாடுவதில் பிரபலமானவர்.
ஆனால், குறிப்பிட்ட இந்த நாளில் மலைப்பாம்பிற்கு பதிலாக ராஜ நாகத்தை பயன்படத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்ட அந்த பாடகரும் ராஜநாகத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார்.
பொதுவாக, உயிரை பாதுகாத்து கொள்ள மலைப்பாம்பின் வாயை முழுவதுமாக கட்டி விடுவார்கள். விஷ பாம்புகள் இருந்தால் அதன் பற்கலை நீக்கி விடுவார்கள்.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் வரவழைக்கப்பட்ட ராஜநாகத்திற்கு பல் நீக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், இது பாடகருக்கு தெரிவிக்கப்படவும் இல்லை.
இந்த சூழலில், ராஜநாகத்துடன் மேடை ஏறிய அந்த பெண் பாடகர் முதல் பாடலை பாடி முடிக்கிறார்.
பின்னர், இரண்டாவது பாடலை பாடும்போது அந்த ராஜநாகத்தை ஒரு துணிக்குள் அடைத்துவிட்டு வருகிறார்.
ஆனால், பாம்பு வெளியே இருப்பத்தை தெரியாத அவர் பாம்பின் வாலை மிதித்து விடுகிறார். ஆக்ரோஷமாக திரும்பி அந்த ராஜநாகம் பாடகரின் தொடையில் கடித்து விடுகிறது.
பாம்பு கடித்ததன் வலியை சிறிதும் உணராத அந்த பெண் தொடர்ந்து பாடல் பாடியுள்ளார். ஆனால், இதனை கவனித்த மற்றவர்கள் வந்து பாம்பை அப்புறப்படுத்துகின்றார்.
சில வினாடிகளுக்கு பின்னர் தான் அவருக்கு திடீரென வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் அவர் திடீரென மேடையிலேயே சுருண்டு விழுகிறார்.
மருத்துவனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜநாகம் மிகவும் கொடிய விஷத்தனமை உடையது. ஒரே ஒரு கடியில் வெளியாகும் விஷமானது ஒரு யானையை கூட கொன்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
