மீண்டும் மலர்ந்த காதல்: இரவு விருந்தில் கலந்து கொண்ட கோஹ்லி- அனுஷ்கா
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
இருப்பினும் அனுஷ்கா சர்மா கிரிக்கெட் போட்டியில் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்.
அதேபோல் கோஹ்லியும் உடைந்த போன காதலை மீண்டும் ஒட்ட வைக்க அனுஷ்காவின் சகோதரர் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் அனுஷ்கா, கோஹ்லியுடன் சேரும் எண்ணம் இல்லை என்று கூறிவிட்டார்.
இருப்பினும் காதலி அனுஷ்கா சர்மாவை சமூகவலைதளங்களில் கேலி செய்தவர்களை விளாசித் தள்ளினார் விராட் கோஹ்லி.
இந்த நிலையில் அனுஷ்கா சர்மா- விராட் கோஹ்லி மீண்டும் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இவர்கள் மும்பையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அனுஷ்கா சர்மா கறுப்பு நிற உடையும், கோஹ்லி சாதாரண ஒரு டி-சர்ட் அணிந்த படி இரவு ஹொட்டலில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தற்போது கோஹ்லி ஐபிஎல் போட்டியிலும், அனுஷ்கா சர்மா சுல்தான் படப்பிடிப்பிலும் பிஸியாக உள்ளனர்.