பெண்ணை கொலை செய்த சிறுமிகளுக்கு காரில் ‘லிப்ட்’ கொடுத்த பொலிசார்: நடந்தது என்ன?
இங்கிலாந்தில் உள்ள Hartlepool என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் வசித்து வந்துள்ளனர்.
இருவரும் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போனதாக பொலிசாருக்கு புகார் வந்துள்ளது.
ஆனால், இதே நாளில் Angela Wrightson(39) என்ற பெண்ணை இருவரும் 100 முறை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். ஆனால், கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
பெண்ணின் வீட்டிற்குள்ளேயே கொலை செய்த இருவரும் மிக சாதாரணமாக வீட்டிற்கு வெளியே வந்து பொலிசாரை அழைத்துள்ளனர்.
‘காணாமல் போனதாக கூறப்பட்ட இருவரும் நாங்கள் தான். விரைவாக வந்து எங்களை அழைத்துச் செல்லுங்கள்’ என கூறியுள்ளனர்.
அதிகாலை 4 மணியளவில் தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று இருவரையும் காரில் ஏற்றியுள்ளனர்.
சில நிமிடங்களுக்கு முன்னர் கொலை செய்ததை காட்டிக்கொள்ளாத இருவரும் சிரித்து பேசிக்கொண்டு வந்ததால், அவர்கள் உடுப்பில் ரத்தக் கறைகள் இருந்ததையும் பொலிசார் கவனிக்க தவறியுள்ளனர்.
இருவரையும் அவர்களது வீட்டில் சேர்த்த பொலிசார் காவல் நிலையம் திரும்பிய பின்னரே கொலை தொடர்பான தகவல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
தற்போது 15 வயதை அடைந்துள்ள இருவர் மீதான குற்றங்களும் நேற்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
