பெண்ணை கொலை செய்த சிறுமிகளுக்கு காரில் ‘லிப்ட்’ கொடுத்த பொலிசார்: நடந்தது என்ன?
இங்கிலாந்தில் உள்ள Hartlepool என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் வசித்து வந்துள்ளனர்.
இருவரும் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் காணாமல் போனதாக பொலிசாருக்கு புகார் வந்துள்ளது.
ஆனால், இதே நாளில் Angela Wrightson(39) என்ற பெண்ணை இருவரும் 100 முறை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். ஆனால், கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
பெண்ணின் வீட்டிற்குள்ளேயே கொலை செய்த இருவரும் மிக சாதாரணமாக வீட்டிற்கு வெளியே வந்து பொலிசாரை அழைத்துள்ளனர்.
‘காணாமல் போனதாக கூறப்பட்ட இருவரும் நாங்கள் தான். விரைவாக வந்து எங்களை அழைத்துச் செல்லுங்கள்’ என கூறியுள்ளனர்.
அதிகாலை 4 மணியளவில் தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று இருவரையும் காரில் ஏற்றியுள்ளனர்.
சில நிமிடங்களுக்கு முன்னர் கொலை செய்ததை காட்டிக்கொள்ளாத இருவரும் சிரித்து பேசிக்கொண்டு வந்ததால், அவர்கள் உடுப்பில் ரத்தக் கறைகள் இருந்ததையும் பொலிசார் கவனிக்க தவறியுள்ளனர்.
இருவரையும் அவர்களது வீட்டில் சேர்த்த பொலிசார் காவல் நிலையம் திரும்பிய பின்னரே கொலை தொடர்பான தகவல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
தற்போது 15 வயதை அடைந்துள்ள இருவர் மீதான குற்றங்களும் நேற்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
