“அன்பான நபர்” 150 பேரின் உயிரை பறித்த விமானிக்கு நினைவஞ்சலி! கொந்தளித்த மக்கள்
ஜேர்மனியின் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியான இந்த நினைவஞ்சலி குறிப்பு தான் அங்குள்ள மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பிரான்ஸ் ஆல்ப்ஸ் அருகே 150 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று திடீரென்று அப்பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் விமானி உள்ளிட்ட அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் தொடர்புடைய விமானியின் குடும்பத்தினர் தான் இந்த ஆண்டு நினைவஞ்சலி குறிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில், இந்த துயரச்சம்பவத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்,
கடந்த ஓராண்டாய் தங்களது துயரத்தில் பங்கேற்று ஆறுதல் தெரிவித்தவர்களை இந்த தருணத்தில் நினைவில் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், அன்பான, மதிப்புமிக்க நபரை தாங்கள் இழந்துள்ளதாகவும் விமானி Lubitz குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நினைவஞ்சலி விளம்பரம், விமான விபத்தில் உற்றார் உறவினர்களை இழந்த குடும்பத்தினருக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளது.
தங்களது குடும்ப உறுப்பினர்கள் பலரை தற்போது கல்லறை தோட்டத்தில்தான் எங்களால் சந்திக்க முடிகிறது,
ஆனால் இவ்விபத்தினை ஏற்படுத்திய அந்த விமானி மதிப்புமிக்க நபராக மாறிவிட்டாரா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே விமானியின் குடும்பத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்களது குழந்தைகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த பெற்றோருக்கு உரிமை இல்லையா எனவும் வினவியுள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
