“அன்பான நபர்” 150 பேரின் உயிரை பறித்த விமானிக்கு நினைவஞ்சலி! கொந்தளித்த மக்கள்
ஜேர்மனியின் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியான இந்த நினைவஞ்சலி குறிப்பு தான் அங்குள்ள மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பிரான்ஸ் ஆல்ப்ஸ் அருகே 150 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று திடீரென்று அப்பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் விமானி உள்ளிட்ட அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் தொடர்புடைய விமானியின் குடும்பத்தினர் தான் இந்த ஆண்டு நினைவஞ்சலி குறிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில், இந்த துயரச்சம்பவத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும்,
கடந்த ஓராண்டாய் தங்களது துயரத்தில் பங்கேற்று ஆறுதல் தெரிவித்தவர்களை இந்த தருணத்தில் நினைவில் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், அன்பான, மதிப்புமிக்க நபரை தாங்கள் இழந்துள்ளதாகவும் விமானி Lubitz குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நினைவஞ்சலி விளம்பரம், விமான விபத்தில் உற்றார் உறவினர்களை இழந்த குடும்பத்தினருக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளது.
தங்களது குடும்ப உறுப்பினர்கள் பலரை தற்போது கல்லறை தோட்டத்தில்தான் எங்களால் சந்திக்க முடிகிறது,
ஆனால் இவ்விபத்தினை ஏற்படுத்திய அந்த விமானி மதிப்புமிக்க நபராக மாறிவிட்டாரா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே விமானியின் குடும்பத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்களது குழந்தைகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த பெற்றோருக்கு உரிமை இல்லையா எனவும் வினவியுள்ளனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
