குடிபோதையில் கப்பலை தரை மேல் ஓட்டிய கேப்டன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்
ஜேர்மனியில் உள்ள Rostock என்ற துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் ஒன்று வந்துள்ளது. Abis Bergen எனப்பெயரிடப்பட்ட அந்த கப்பலின் நீளம் 85 மீற்றர் ஆகும்.
ஆனால், கடலில் இருந்து வந்த கப்பல் குறிப்பிட்ட எல்லைக்குள் நிற்காமல் தரையை நோக்கி பாய்ந்து சென்று நின்றுள்ளது.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைவாக வந்த துறைமுக அதிகாரிகள் கப்பலில் இருந்த கேப்டனை உடனடியாக சோதனை செய்துள்ளனர்.
அப்போது, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திருந்ததால், கட்டுப்பாடில்லாமல் கப்பலை ஓட்டியது தெரியவந்துள்ளது.
எனினும், கேப்டனின் பெயர் உள்ளிட்ட எந்த தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
உடனடியாக ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, தரையில் மோதி நின்ற கப்பலை சிறிய படகுகளின் உதவியுடன் மீண்டும் கடலுக்கு கொண்டு விடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிசார், ‘கேப்டனின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், கேப்டன் பொறுப்பில் அவர் தொடர்ந்து நீடிப்பது ஆபத்தான விடயம்’ என கருத்து தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
