கனடாவில் காணாமல் போன 2 வயது மகன்: கண்ணீருடன் உதவி கோரிய பெற்றோர் (வீடியோ இணைப்பு)
மனிடோபா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் டோம் மார்ட்டின்ஸ் மற்றும் டெஸ்டினி டர்னர் என்ற தம்பதி தங்களது சேஸ் மார்ட்டின்ஸ் என்ற 2 வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்தபோது சேஸ் திடீரென காணாமல் போயுள்ளான்.
மகனை காணாமல் தவித்த பெற்றோர் உடனடியாக பொலிசாரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்ற பொலிசார் சுமார் 500க்கும் மேற்பட்ட தன்னார்வ நபர்களை திரட்டிக்கொண்டு குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
குழந்தை காணாமல் போய் தற்போது 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், பெற்றோர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘எங்களுடை குழந்தையை காணாமல் மரண வேதனையில் துடித்துக் கொண்டு இருக்கிறோம்.
குழந்தையை யார் வைத்திருந்தாலும் கூட, அச்சப்பட வேண்டாம். உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். உங்கள் மீது எந்த கோபமும் இல்லை. தயவுசெய்து உடனடியாக குழந்தையை ஒப்படைத்து விடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குழந்தை குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட அலைமோதும் மக்கள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்
புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு
ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
